தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்


தொடர் மழை எதிரொலி: அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 18 Sep 2019 10:00 PM GMT (Updated: 18 Sep 2019 2:36 PM GMT)

தொடர் மழையின் காரணமாக அன்னவாசல் பகுதியில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அன்னவாசல்,

பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சீராக பெய்யவில்லை. இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டதோடு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையும் உள்ளது. இதனால் விவசாயத்தை நம்பி இருந்த விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் தவிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான விளை நிலங்களில் விவசாயம் செய்யப் படாத நிலையும் உள்ளது.

இந்நிலையில் அன்ன வாசல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் தொடர்ந்து பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையில், மழைநீரை பயன்படுத்தி தங்கள் வயல்களில் விவசாய பணிகளை தொடங்கி, தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நடவு பணிகள் தீவிரம்

அதன்படி அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி, சித்தன்னவாசல், சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, வீரப்பட்டி, தாண்றீஸ்வரம், சென்னப்பநாயக்கன்பட்டி, வவ்வாநேரி, கடம்பராயன்பட்டி, புதூர், மேட்டுச்சாலை, இலுப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஏர் பூட்டியும், டிராக்டர் மூலமும் உழவு பணிகளை மேற்கொண்டனர். இதனால் உழப்பட்ட விளைநிலங்கள் விதைக்க தயார் நிலையில் உள்ளன.

இதற்கிடையே ஆழ்குழாய் கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரை வைத்து சில பகுதிகளில் ஏற்கனவே விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதிகளில் நடவு பணிகள் ெதாடங்கியுள்ளன. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story