வேப்பந்தட்டை அருகே கிணற்றில் மின்வாரிய ஊழியர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


வேப்பந்தட்டை அருகே கிணற்றில் மின்வாரிய ஊழியர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Oct 2019 10:15 PM GMT (Updated: 1 Oct 2019 3:35 PM GMT)

வேப்பந்தட்டை அருகே கிணற்றில் மின்வாரிய ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அய்யாவு(வயது 50). இவர் கை.களத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் லைன் மேன் ஆக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவரது வீட்டின் அருகே சர்க்கரை என்பவருக்கு சொந்தமான கிணற்றில் அய்யாவு மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து கை.களத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

விசாரணை

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் அய்யாவுவின் உடலை கிணற்றில் இருந்து மேலே கொண்டு வந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யாவு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் போட்டு உள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story