வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 18 பேர் கைது 8 படகுகள் பறிமுதல்

வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 18 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். அவர்களுடைய 8 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேதாரண்யம்,
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படையினர் கடல் எல்லையில் இரவு, பகலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
அச்சுறுத்தல் அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் போலீசார், கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் ‘கியூ’ பிரிவு போலீசார் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
எல்லை தாண்டிய மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படை வீரர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எல்லை பகுதியில் சந்தேகத்துக் குரிய வகையில் படகுகள் நடமாட்டம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்திய கடற்படையினர் அந்த பகுதிக்கு சென்றபோது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 18 பேர் 8 படகுகளில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து அவர்களை கடற் படையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
படகுகள் பறிமுதல்
அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையையொட்டி தீவிரவாதிகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படையினர் கடல் எல்லையில் இரவு, பகலாக ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
அச்சுறுத்தல் அதிகரிப்பு
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு நீக்கப்பட்டதை தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் மேலும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடற்படையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் போலீசார், கடலோர காவல் குழுமத்தினர் மற்றும் ‘கியூ’ பிரிவு போலீசார் இணைந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
எல்லை தாண்டிய மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆங்காங்கே சோதனை சாவடி அமைத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்திய கடற்படை வீரர்கள் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எல்லை பகுதியில் சந்தேகத்துக் குரிய வகையில் படகுகள் நடமாட்டம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்திய கடற்படையினர் அந்த பகுதிக்கு சென்றபோது இலங்கையை சேர்ந்த மீனவர்கள் 18 பேர் 8 படகுகளில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்துக்கொண்டிருந்ததை பார்த்தனர். இதையடுத்து அவர்களை கடற் படையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.
படகுகள் பறிமுதல்
அவர்களுடைய படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று(வெள்ளிக்கிழமை) காரைக்கால் துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story