வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:15 PM GMT (Updated: 9 Oct 2019 7:52 PM GMT)

வேலாயுதம்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15½ பவுன் நகை-வெள்ளி கொலுசுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், வேலா யுதம்பாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 49). இவரது அக்கா கவுசல்யா (58). இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு 2 பேரும் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். அங்கு தரிசனம் செய்து விட்டு நேற்றுமுன்தினம் மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பின்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

நகை திருட்டு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் அவர்கள் வைத்திருந்த 15½ பவுன் நகைகள், 3 ஜோடி வெள்ளி கொலுசுகள், மடிக்கணினி ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஜெகதீசன் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story