நகைக்கடை கொள்ளையில் தலைமறைவாக உள்ள முருகனை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவ தயார் போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் தகவல்


நகைக்கடை கொள்ளையில் தலைமறைவாக உள்ள முருகனை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவ தயார் போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் தகவல்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:09 PM GMT (Updated: 10 Oct 2019 11:09 PM GMT)

நகைக்கடை கொள்ளையில் தலைமறைவாக உள்ள முருகனை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவ தயாராக இருப்பதாக போலீஸ் ஐ.ஜி. ஹரிசேகரன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி, ரூ.12 கோடியே 41 லட் சம் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் முருகனின் கூட்டாளியான திருவாரூரை சேர்ந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சுரேஷ் என்பவர் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

ஆனால் தலைமறைவாக உள்ள முருகனை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்காட்டி வருகின்றனர். இந்தநிலையில், கொள்ளை கும்பல் தலைவன் முருகனை பிடிக்க தமிழக போலீசாருக்கு உதவதயார் என்று கர்நாடக மாநில போலீஸ் ஐ.ஜி.யான ஹரிசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச் சி யில் உள்ள நகைக்கடை யில் கொள்ளையடித்த வழக்கில் பிரபல கொள்ளையனான முருகன் தலைமறைவாக உள்ளார். நான், பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கு கூடு தல் போலீஸ் கமி ஷ ன ராக பணி யாற் றிய போது பானசாவடி பகு தி யில் வசிக் கும் தீபக் சிங் கால் என் ப வ ரின் வீட் டில் நகை கள், பணம் திருட்டு போய் இருந் தது. இந்த வழக் கில் கடந்த 2015-ம் ஆண்டு திரு வா ரூர் முரு கன், அவ ரது கூட் டா ளி கள் சுரேஷ், தின க ரனை எனது தலை மையிலான போலீசார் கைது செய்திருந்தனர். முருகன் மற்றும் அவ ரது கூட் டா ளி க ளி டம் இருந்து ரூ.3 கோடியே 16 லட் சம் மதிப் பி லான நகை கள், பொருட் கள் மீட் கப் பட்டு இருந் தது. முரு கனை கைது செய் தி ருந் த தன் மூலம் 80 வழக் கு களில் தீர்வு காணப் பட் டது.

இந்த வழக்குகளில் பெங்களூரு சிறையில் அடைக் கப் பட்டு ஜாமீ னில் வெளியே வந்த முரு க னும், அவ ரது கூட்டாளிகளும் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது திருச்சி யில் நடந்திருக்கும் நகைக்கடை கொள்ளை வழக் கில் தமி ழக போலீ சா ரால் தேடப் படும் நப ராக முரு கன் உள்ளார். இவரை கைது செய்வதற்கு திருச்சி போலீசாருக்கு உதவி செய் ய வும், முரு கன் பற் றிய தக வல் களை பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராகி இருக்கி றோம். நாங்கள் அளிக்கும் தகவல்கள் முருகனை கைது செய்ய தமிழக போலீசாருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

புதிதாக நகைக்கடைகளை திறக்கும் போது, அதற்கு சம்பந் தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு சார்பில் உரிமம் வழங்கப்படுகிறது. அப்போது அந்த நகைக்கடைகளில் பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து அதிகாரிகள் உரிமம் வழங்க வேண்டும்.

புதிதாக திறக்கப்படும் நகைக்கடைகளில் உரிய பாதுகாப்பு வசதிகள் இருந்தால் மட்டுமே உரி மம் வழங்க வேண் டும். அப் படி வழங்கினால் நகைக் கடைகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படும். இவ்வாறு போலீஸ் ஐ.ஜி. ஹரி சேகரன் கூறியுள் ளார்.

Next Story