காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர்- ஜாலப்பா வீடுகளில் வருமானவரி சோதனை மருத்துவக் கல்லூரிகள் உள்பட 30 இடங்களில் 100 அதிகாரிகள் நடத்தினர்


காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பரமேஸ்வர்- ஜாலப்பா வீடுகளில் வருமானவரி சோதனை மருத்துவக் கல்லூரிகள் உள்பட 30 இடங்களில் 100 அதிகாரிகள் நடத்தினர்
x
தினத்தந்தி 10 Oct 2019 11:16 PM GMT (Updated: 10 Oct 2019 11:16 PM GMT)

காங்கிரஸ் மூத்ததலை வர்களான பரமேஸ்வர், ஜாலப்பா ஆகியோரின் மருத்துவகல்லூரிகள், வீடு-அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் 100 வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தின. ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி முதல்-மந்திரி யாகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியா கவும் இருந்தனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு பா.ஜனதா ஆட்சி அமைத்தது. பா.ஜனதாவின் மூத்ததலைவரான எடியூரப்பா முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றார்.

இதன் தொடர்ச் சி யாக ஏற் க னவே நடந்த வரு மான வரி சோதனை தொடர் பாக காங் கி ரஸ் மூத்த தலை வ ரும், முன் னாள் மந் தி ரி யு மான டி.கே.சிவக் கு மாரை அம லாக் கத் து றை யி னர் கைது செய்து சிறை யில் அடைத் த னர். இந்த நிலை யில், காங் கி ரஸ் மூத்த தலை வர் களும், முன் னாள் துணை முதல்-மந் தி ரி யு மான பர மேஸ் வர், முன் னாள் மத் திய மந் திரி ஆர்.எல்.ஜாலப்பா ஆகி யோ ரின் வீடு, அலு வ ல கங் கள், மருத் துவ கல் லூ ரி கள், பிற கல் லூ ரி கள் மற் றும் அவர் க ளின் உற வி னர் கள், ஆத ர வா ளர் க ளின் வீடு-அலு வ ல கங் களில் வரு மான வரி சோதனை நடத் தப் பட் டது.

அதன்படி துமகூருடவுன் சித்தார்த் நகரில் உள்ள முன்னாள் துணை முதல்-மந் திரி பர மேஸ் வ ரின் வீட் டில் நேற்று காைலயில் வரு மான வரித் துறை அதி கா ரி கள் காரில் சென்று சோதனை நடத் தி னர்.

அதே போல் தும கூரு டவுன் மரு ளூ ரில் உள்ள பர மேஸ் வ ருக்கு சொந் த மான என் ஜி னீ ரிங் கல் லூரி மற் றும் டிகிரி கல் லூரி, பெங் க ளூரு புற ந கர் மாவட் டம் நெல மங் க ளா வில் உள்ள மருத் துவ கல் லூரி ஆகி ய வற் றின் மீதும் வரு மான வரி சோதனை நடத் தப் பட் டது. அப் போது கல் லூ ரி களில் மாண வர் க ளின் சேர்க்கை உள் பட பல் வேறு ஆவ ணங் களை அதி கா ரி கள் கைப் பற்றி பரி சீ லனை செய் த னர்.

இந்த சோத னை க ளின் போது பர மேஸ் வர் கொரட் ட கெரே தாலுகா ஜம் பே ன ஹள்ளி கிரா மத் தில் உள்ள ஏரி யில் ‘பாகினா’ பூஜை செய்ய சென் றார். இதை ய டுத்து கொரட் ட கெரே சென்ற வரு மான வரித் துறை அதி கா ரி கள் அங்கு இருந்த பர மேஸ் வரை விருந் தி னர் மாளி கைக்கு அழைத்து சென்று விசா ரித் த னர்.

அப் போது கல் லூரி நிர் வா கம் தொடர் பான பணப் ப ரி மாற் றம், சேர்க்கை தொடர் பான கேள் வி களை அதி கா ரி கள் கேட்டு அறிந்து கொண் ட னர்.

அதன் பி றகு அவரை அங் கி ருந்து பெங் க ளூரு அழைத்து வந்த அதி கா ரி கள் சதா சி வ ந க ரில் உள்ள வீட் டில் அதி ரடி சோதனை நடத்தி ஆவ ணங் களை ஆய்வு செய் த னர். இந்த சோத னை யின் கார ண மாக நேற்று பர மேஸ் வரை அதி கா ரி கள் வெளியே விட வில்லை.

இத னால் அவர் நேற்று சட் ட ச பைக்கு செல் ல வில்லை. அத் து டன் சதா சி வ ந க ரில் உள்ள வீட் டில் நடந்த சோத னை யின் போது பர மேஸ் வ ரின் உத வி யா ளர் ரமேசை அதி கா ரி கள் காரில் அழைத்து சென் ற னர்.

இதே போல் காங் கி ரஸ் மூத்த தலை வ ரும், முன் னாள் மத் திய மந் தி ரி யு மான ஆர்.எல். ஜாலப் பா வின் வீடு, கல் லூ ரி கள், உற வி னர் க ளின் வீடு களில் நேற்று வரு மான வரி சோதனை நடந் தது. கோலார் புற ந க ரில் உள்ள ஜாலப் பா வின் மருத் துவ கல் லூரி மற் றும் மருத் து வ மனை மற் றும் ஜாலப் பா வின் வீடு ஆகி ய வற் றில் வரு மான வரி அதி கா ரி கள் நுழைந்து ஆவ ணங் களை பரி சீ லனை செய் த னர்.

பெங் க ளூரு புற ந கர் மாவட் டம் தொட் ட பள் ளாப் புரா டவுன் சோமேஸ் வரா படா வ னே யில் ஜாலப் பா வின் மகன் ராஜேந் தி ரா வின் வீடு, அலு வ ல கம், சிக் பள் ளாப் பூர் டவுன் பிர சாந்த் நக ரில் உள்ள ஜாலப் பா வின் உற வி னர் நாக ராஜ் வீட் டி லும் வரு மான வரி சோதனை நடந் தது. ஜாலப்பா நடத்தி வரும் மருத் துவ கல் லூ ரி யில் நாக ராஜ் செய லா ள ராக இருப் பது குறிப் பி டத் தக் கது.

இது த விர பர மேஸ் வ ரின் சகோ த ர ரும், டாக் ட ரு மான சிவப் பி ர சாத் வீடு, அலு வ ல கம் மற் றும் பர மேஸ் வ ரின் குடும்ப உறுப் பி னர் கள் அங் கம் வகிக் கும் கல்வி நிறு வ னங் கள் மீதும் சோதனை நடத் தப் பட் டது. பெங் க ளூரு புற ந கர் மாவட் டம் நெல மங் களா தாலுகா பேகூ ரில் உள்ள ரியல் எஸ் டேட் அதி பர் ரங் க நாத் தின் வீடு, அலு வ ல கத் தி லும் நேற்று வரு மான வரி சோதனை நடந் தது. இவர் பர மேஸ் வ ரின் ஆத ர வா ளர் ஆவார்.

அதே போல் சுபாஷ் நக ரில் உள்ள ஜன தா த ளம்(எஸ்) கட் சி யின் முன் னாள் நக ர சபை தலை வர் சிவக் கு மா ரின் வீடு உள் பட நேற்று மட் டும் பெங் க ளூரு, பெங் க ளூரு புற ந கர், தும கூரு, சிக் பள் ளாப் பூர், கோலார் ஆகிய மாவட் டங் களில் மொத் தம் 30 இடங் களில் வரு மான வரி சோதனை நடந் தது. நேற்று இரவு வரை நீடித்த இந்த சோத னை யில் 100-க்கும் அதி க மான வரு மான வரித் துறை அதி கா ரி கள் ஈடு பட் ட னர்.

நேற் றைய சோத னை யின் போது பர மேஸ் வர், ஜாலப்பா வீடு, அலு வ ல கம் மற் றும் சோதனை நடை பெற்ற கல் லூ ரி கள் உள் ளிட்ட இடங் களில் இருந்து சில முக் கிய ஆவ ணங் கள் சிக் கின. அவற்றை அதி கா ரி கள் கைப் பற்றி கொண் ட னர். முதற் கட் ட மாக தக வ லின் அடிப் ப டை யில் மருத் துவ கல் லூ ரி களில், கல் லூரி நிர் வா கத் துக்கு என்று இருக் கும் இட ஒ துக் கீட் டில் சேர்க்கை நடத்த மாணவ-மாண வி க ளி டம் இருந்து அதிக நன் கொ டை வசூ லித் த தாக குற் றச் சாட்டு எழுந் தது.

இதில் முறை கேடு நடந்து இருக் க லாம் என்ற அடிப் ப டை யில் காங் கி ரஸ் மூத்த தலை வர் க ளான பர மேஸ் வர், ஜாலப்பா ஆகி யோ ரின் வீடு, அலு வ ல கம், உற வி னர் க ளின் வீடு களில் சோதனை நடை பெற்று இருப் ப தாக தக வல் கள் வெளி யாகி உள் ளன.

முன்னதாக, இந்த சோதனை நடந்த அனைத்து இடங் க ளி லும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந் தது. பெங்களூருசதாசிவநகரில் உள்ள பரமேஸ்வரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில் அவரை பார்க்க காங்கிரஸ் மூத்த தலைவர்களான பி.கே.ஹரிபிரசாத், ஜமீர் அகமதுகான் ஆகியோர் சென்றனர். அப்போது அவர்களை வீட்டுக்குள்ளே அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்ட னர்.


Next Story