திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 17 Oct 2019 10:30 PM GMT (Updated: 17 Oct 2019 7:02 PM GMT)

திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல், அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் பொதுவினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திருவாரூரில் இருந்து தேனிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் பொதுரக அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதையொட்டி திருவாரூர் பகுதியில் இருந்து அரிசி மூட்டைகள் 91 லாரிகள் மூலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்து லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் தேனிக்கு புறப்பட்டு சென்றது.

Next Story