இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்


இடைத்தேர்தலில் வெற்றி: அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2019 11:00 PM GMT (Updated: 24 Oct 2019 9:57 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் வெற்றியை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

அருப்புக்கோட்டை,

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய அ.தி.மு.க சார்பில் நகர செயலாளர் சக்திவேல்பாண்டியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சோலைசேதுபதி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன், பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன், ராமர், நகர தலைவர் பம்பாய்மணி, நகர துணை செயலாளர் முனியசாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் பிரேமா, செல்வேந்திரன், கலுசிவலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் சவுண்டையா, குருந்தமடம் மாரியப்பன், சிறுபான்மை பிரிவு தமீம் அன்சாரி, பொருளாளர் செந்தமிழ்செல்வன், சீனிவாசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் மோகன்வேல், அறங்காவலர் பிரிவு சரவணன் உள்பட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ.

இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.எல்.ஏ. சந்திரபிரபா தலைமையில் அ.தி.மு.க. வினர் இனிப்பு வழங்கி இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடினர். சாத்தூரில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர். இதே போல் மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க.வினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story