மொரப்பூர் அருகே ரெயில் மோதி சுகாதார ஆய்வாளர் பலி

மொரப்பூர் அருகே ரெயில் மோதி சுகாதார ஆய்வாளர் பலியானார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). சுகாதார ஆய்வாளரான இவர் காளிப்பேட்டை பகுதியில் பணிபுரிந்து வந்தார். இவர் மொரப்பூர் அருகே சிந்தல்பாடி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணை
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சரவணன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி இறந்தாரா? வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் மோதி சுகாதார ஆய்வாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55). சுகாதார ஆய்வாளரான இவர் காளிப்பேட்டை பகுதியில் பணிபுரிந்து வந்தார். இவர் மொரப்பூர் அருகே சிந்தல்பாடி பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுபற்றி அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மொரப்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரவணனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
போலீசார் விசாரணை
பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சரவணன் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரெயில் மோதி இறந்தாரா? வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து மொரப்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரெயில் மோதி சுகாதார ஆய்வாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story