பூந்தொட்டியால் தலையில் தாக்கி மருமகளை கொலை செய்த மாமியார் போலீசில் சரண்


பூந்தொட்டியால் தலையில் தாக்கி மருமகளை கொலை செய்த மாமியார் போலீசில் சரண்
x
தினத்தந்தி 15 Dec 2019 11:00 PM GMT (Updated: 15 Dec 2019 8:52 PM GMT)

பூந்தொட்டியை தலையில் தாக்கி மருமகளை கொலை செய்த மாமியார் போலீசில் சரணடைந்தார்.

வசாய், 

வசாய், மானிக்புர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகன் அமெரிக்காவில் உள்ளார். அவரது மனைவி ஆரியா(32). இதில் ஆனந்திக்கும், மருமகள் ஆரியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆரியா மகன் மற்றும் பேரக்குழந்தைகளை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக ஆனந்தி நினைத்தார்.

சமீபத்தில் குடும்பத்தினர் எல்லோரும் அமெரிக்காவுக்கு சென்று திரும்பி வந்து உள்ளனர். அவர்களுடன் அங்கு வேலை பார்த்த ஆனந்தியின் மகனும் வசாய் வந்து உள்ளார்.

நேற்று காலை ஆனந்தியின் மகன் நடை பயிற்சிக்கு சென்று உள்ளார். அந்த நேரத்தில் ஆனந்திக்கும் அவரது மருமகளுக்கும் இடையே வழக்கம் போல சண்டை வந்தது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்தி வீட்டில் இருந்த பூந்தொட்டியை எடுத்து மருமகளின் தலையில் அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து ஆனந்தி மாணிக்பூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் விரைந்து சென்று ஆரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மருமகளை கொலை செய்த மாமியார் ஆனந்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story