காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் - எம்.ஜி.ஆர். நினைவு தினம்


காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் - எம்.ஜி.ஆர். நினைவு தினம்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:00 PM GMT (Updated: 24 Dec 2019 10:00 PM GMT)

காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.

வாலாஜாபாத்,

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் காஞ்சீபுரம் ஓரிக்கை, காவலான்கேட், பூக்கடை சத்திரம், தேரடி, கருக்கு பேட்டை, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.

பின்னர் பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன் தும்பவனம், ஜீவானந்தம், கே.பிரகாஷ்பாபு, தங்க பஞ்சாட்சரம், முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story