மங்கலம் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு


மங்கலம் அருகே, மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 31 Dec 2019 9:30 PM GMT (Updated: 31 Dec 2019 12:59 PM GMT)

மங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அருகில் உள்ள அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 29). இவர் கடந்த 29–ந் தேதி மோட்டார் சைக்கிளில் தனது அண்ணனின் திருமணத்திற்காக பத்திரிகை கொடுப்பதற்காக மங்கலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

ஆர்ப்பாக்கம் கூட்டு ரோடு அருகே வரும் போது முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென நின்றது. அந்த மோட்டார் சைக்கிள் மீது சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story