கயத்தாறு அருகே, மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி


கயத்தாறு அருகே, மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 Jan 2020 10:30 PM GMT (Updated: 9 Jan 2020 2:14 PM GMT)

கயத்தாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.

கயத்தாறு, 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). இவர் வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி பரமேசுவரி. இவர்களுடைய மகன் மதுபாலன் (2).

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் கயத்தாறுக்கு சென்றார். பின்னர் அவர் இரவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story