மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்


மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 11 Jan 2020 11:00 PM GMT (Updated: 11 Jan 2020 7:58 PM GMT)

திருச்சி மாவட்டத்தில் மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு, கலெக்டர் சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி,

பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் போகிப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.அதன்படி, நாளை மறுநாள்(ெசவ்வாய்க்கிழமை) போகிப்பண்டிகை ஆகும். அன்று மாசு இல்லாத போகிப்பண்டிகை கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறது. பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு, இதனால் வெளிப்படும் நச்சு வாயுக் களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகள் சிரமம்

மேலும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக புகை அமைந்து விடுகிறது. எனவே, போகிப்பண்டிகையின்போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Next Story