பந்தலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


பந்தலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 17 Jan 2020 10:30 PM GMT (Updated: 17 Jan 2020 5:18 PM GMT)

பந்தலூரில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பந்தலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் கிரு‌‌ஷ்ணன் (வயது 20). தொழிலாளி. இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இந்தநிலையில் அந்த சிறுமி, தனக்கு வயிறுவலிப்பதாக தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அந்த சிறுமியை பெற்றோர் கூடலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பம் என்பதும், அவளுக்கு வயது 16 என்பதும் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இதுபற்றி குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் அறிவுரையின்படி அந்த சிறுமி இதுகுறித்து தேவாலா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, 16 வயது சிறுமியை திருமணம் செய்ததோடு, கர்ப்பமாக்கிய கிரு‌‌ஷ்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Next Story