செங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


செங்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
x
தினத்தந்தி 9 Feb 2020 10:45 PM GMT (Updated: 9 Feb 2020 10:37 PM GMT)

செங்கோட்டையில் காவல் துறை மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

செங்கோட்டை,

செங்கோட்டையில் காவல் துறை மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாம் சுந்தர் கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிந்து விபத்தில்லா தமிழகம் உருவாக்க வேண்டியும், பொதுமக்களிடையே நட்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு டிரஸர்ஐலண்ட் பள்ளி வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரத்துக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Next Story