வானூர் அருகே, ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வானூர் அருகே, ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 13 Feb 2020 9:45 PM GMT (Updated: 13 Feb 2020 5:28 PM GMT)

வானூர் அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் பசுபதி என்கிற பச்சையப்பன் (வயது 26). ரவுடியான இவர் மீது வானூர், ஆரோவில் பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக பசுபதியை ஆரோவில் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் பசுபதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டார். இதையடுத்து பசுபதியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Next Story