மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை


மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Feb 2020 10:00 PM GMT (Updated: 18 Feb 2020 5:45 PM GMT)

மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி விரிவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கொண்ட அவரது மனைவி திருக்கழுக்குன்றம் அருகே உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன விரக்தியில் இருந்த ரமேஷ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story