குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் வேதனை: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் வேதனை: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2020 10:15 PM GMT (Updated: 24 Feb 2020 9:35 PM GMT)

வீரவநல்லூர் அருகே குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள அரிகேசவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 38) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உண்டு.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவரது மகள் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டாள். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரின் மகன் சஞ்சய் (9) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டான்.

2 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் முத்துக்குமார் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் திடீரென்று முத்துக்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து உடனடியாக வீரவநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முத்துக்குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குழந்தைகள் அடுத்தடுத்து இறந்த வேதனையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story