தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி


தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 25 Feb 2020 11:00 PM GMT (Updated: 25 Feb 2020 8:22 PM GMT)

தாரமங்கலத்தில் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள பெரியகாடம்பட்டி மங்கானூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் முருகநாதன் (வயது 38), சிவில் என்ஜினீயர்.

இவர் தாரமங்கலம் மாதாகோவில் பகுதியில் மல்லிகா என்பவருக்கு வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் அந்த வீட்டு கட்டிடத்தில் ஏறி பணிகள் எந்தளவு நடைபெற்றுள்ளது என்பதை பார்வையிட சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தில் இருந்து தவறிவிழுந்த அவர் பலத்த காயம் அடைந்தார்.

சாவு

பின்னர் சுயநினைவின்றி கிடந்த முருகநாதனை அப்பகுதி மக்கள் மீட்டு உடனடியாக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த முருகநாதனுக்கு, ரேணுகாதேவி (34) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும், 11 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story