7 இடங்களில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 இடங்களில் முஸ்லிம்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் 7 இடங்களில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகி பாரூக் முகம்மது தலைமை தாங்கினார்.
இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும். என்.ஆர்.சி, என்.பி.ஆர். உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்தக்கூடாது. தமிழக அரசு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த தர்ணா போராட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை டவுன் போலீசார் திலகர் திடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல கோட்டைப்பட்டினத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு கிளை செயலாளர் நிஜாம் தலைமை தாங்கினார். மீமிசலில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் குலாம் பாட்ஷா தலைமையிலும், கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மீரான் தலைமையிலும், அன்னவாசலில் கிளை செயலாளர் அமானுல்லா தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
முக்கண்ணாமலைப்பட்டியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு கிளை செயலாளர் ஜக்கரியா தலைமையிலும், அறந்தாங்கியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு அறந்தாங்கி தலைவர் சலீம் தலைமையிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்த தர்ணா போராட்டங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
Related Tags :
Next Story