அரக்கோணம் அருகே, மணல் கடத்திய வாலிபர் கைது - 3 பேருக்கு வலைவீச்சு


அரக்கோணம் அருகே, மணல் கடத்திய வாலிபர் கைது - 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 March 2020 3:30 AM IST (Updated: 6 March 2020 3:43 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரக்கோணம்,

அரக்கோணம் தாலுகாவிற்குட்பட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை மற்றும் போலீசார் அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாறன்கண்டிகை கிராமம் அருகே போலீசார் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை மடக்கினர். இதனால் லாரியில் இருந்து 3 பேர் குதித்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் லாரியில் சோதனை செய்து பார்த்த போது மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் லாரியில் இருந்த மாறன்கண்டிகை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 20) என்பவரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
1 More update

Next Story