கொரோனா பீதியால் பயணிகள் குறைவு குவைத் விமானங்கள் ரத்து


கொரோனா பீதியால் பயணிகள் குறைவு   குவைத் விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 10 March 2020 12:07 AM GMT (Updated: 10 March 2020 12:07 AM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் குவைத் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆலந்தூர், 

சீனாவை தொடர்ந்து உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்றன. இதனால் பல வெளிநாடுகளில் சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் சில நாடுகளில் இருந்து வர சுற்றுலா விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளது.

விமான பயணங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன சோதனை கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. பன்னாட்டு முனையத்தில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் முக கவசங்களை அணிந்தே பணியாற்றுகின்றனர்.

குவைத் விமானங்கள் ரத்து

விமானங்களில் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் 50-க்கும் மேற்பட்ட விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் பலத்த பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் எண்ணிக்கை குறைவால் குவைத்தில் இருந்து சென்னை வந்து செல்லும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் சென்னையில் இருந்து குவைத் சென்று வரும் 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

Next Story