நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2020 12:00 AM GMT (Updated: 21 March 2020 5:46 PM GMT)

நன்னிலத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுபிரியர்கள் கடையை திறக்க வலியுறுத்தி மது பிரியர்கள் கோ‌‌ஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளம் பேட்டையில் புதிதாக நேற்று டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள், டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் இருந்த மது பிரியர்கள் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பரபரப்பு

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாலும், அந்த கடையை திறக்க கோரி மதுபிரியர்கள் கோ‌‌ஷமிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story