தடையை மீறி கறி விருந்து; 12 பேர் கைது


தடையை மீறி கறி விருந்து; 12 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2020 10:58 PM GMT (Updated: 23 April 2020 10:58 PM GMT)

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிங்கம்புணரி அருகே கறி விருந்தில் பங்கேற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிங்கம்புணரி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் ஒரு தோப்பில் சிலர் பன்றி கறி சமைத்து விருந்து நடத்தினர். மேலும் இந்த விருந்து நிகழ்ச்சியை சமூக வலைதளங்களிலும் பரப்பினர்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு 12 பேர் பன்றி கறி சமைத்து விருந்து நடத்தியது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் கிருங்காக்கோட்டையை சேர்ந்த சரவணன் (வயது42), ராஜேந்திரன் (60), சேகர் மகன் விஜயகுமார் (26), அன்புச்செல்வன் மகன் இளமாறன் (23), அன்புச்செல்வன் மகன் ஜெயபிரகாஷ் (21), கருணாநிதி மகன் கபிலன் (21), சேதுரத்தினம் மகன் ஜெயசீலன்(26), மணி மகன் ஜெயந்த் (23), ரஜேந்திரன் மகன் கதிரவன் (39), சத்தியமூர்த்தி மகன் அழகு பாண்டி (23), மாரிமுத்து மகன் ஸ்டீபன் (19) மற்றும் சிங்கம்புணரியை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (24) என தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Next Story