வேடசந்தூர் கோர்ட்டில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது


வேடசந்தூர் கோர்ட்டில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 27 April 2020 1:17 AM GMT (Updated: 27 April 2020 1:17 AM GMT)

வேடசந்தூரில் கோர்ட்டு கதவின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் சந்தைப்பேட்டையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேடசந்தூர் குஜிலியம்பாறையில் மதுபாட்டில்கள் விற்றவர் களை கைது செய்து திண்டுக் கல் மதுவிலக்கு போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஆயிரத்து 392 மதுபாட்டில்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

இந்த மதுபாட்டில்களை கோர்ட்டில் உள்ள ஒரு அறையில் வைத்து ஊழியர்கள் பூட்டி தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இளவரசன் தலைமையிலான போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் 4 மர்ம நபர்கள் கோர்ட்டின் முன்பக்க நுழைவுவாயில் வழியாக உள்ளே புகுந்து அறை கதவின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பது தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து கேமராவில் பதிவான மர்ம நபர்களின் அடையாளத்தை வைத்து சந்தைப்பேட்டையை சேர்ந்த பிச்சைமுத்து (வயது 45), அவருடைய மகன் சதீஷ் (22), சந்தோஷ் (20), பால்பாண்டி (22) ஆகிய 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கோர்ட்டில் இருந்து 29 மதுபாட்டில்களை திருடியதாகவும், அதில் 4 பாட்டில்களை குடித்ததாகவும் கூறினர். மீதமுள்ள 25 மதுபாட்டில்களை கோர்ட்டு அருகே உள்ள பகுதியில் புதைத்து வைத்து இருப்பதாக அவர்கள் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கோர்ட்டு அருகே புதைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

ஊரடங்கால் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் மதுபான பிரியர்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கோர்ட்டு என்றும் பாராமல் அங்கு இருந்த மதுபானங்களை திருடிச் சென்ற, இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story