சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை


சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 May 2020 11:17 PM GMT (Updated: 13 May 2020 11:17 PM GMT)

சம்பளம் வழங்க கோரி உள்ளாட்சித்துறை அலுவலகத்தை நகராட்சி ஊழியர்கள் முற்றுகை.

புதுச்சேரி,

புதுவை நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து, அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடாமல் கடந்த 4-ந் தேதி முதல் கம்பன் கலையரங்கம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், உள்ளாட்சித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்கண்ணன், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை (வெள்ளிக்கிழமை) சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Next Story