திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: டாக்டர்கள் தகவல்


திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: டாக்டர்கள் தகவல்
x
தினத்தந்தி 14 May 2020 11:15 PM GMT (Updated: 14 May 2020 8:41 PM GMT)

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனையில் 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டதாக டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.இதனால் திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். 112 பேர் குணமடைந்த நிலையில், 2 பேர் மட்டும் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். 114 பேரும் குணமடைந்த நிலையில் தற்போது திருப்பூர் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2 பேருக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லாதது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:- திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 2 பேர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக அவர்களது, சளி மற்றும் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். இதற்கான முடிவு வந்தது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story