கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு தளம் சேதம்


கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; படகு தளம் சேதம்
x
தினத்தந்தி 21 May 2020 1:19 AM GMT (Updated: 21 May 2020 1:19 AM GMT)

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் படகு தளம் உடைந்து சேதமடைந்தது.

கன்னியாகுமரி, 

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் படகு தளம் உடைந்து சேதமடைந்தது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோயால் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பே கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி மதியத்துக்கு பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில் படகுகள் நிறுத்தப்படும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் உள்ள படகுதளம் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. 50 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.கோடி செலவில் படகுதளம் சீரமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. ஊரடங்கால் படகுதளம் சீரமைக்கும் பணியும் தடைபட்டுள்ளது.

படகுதளம் சேதம்

ஊரடங்கில் தளர்வு அறிவித்த பிறகு கடந்த 4-ந் தேதி முதல் படகுதளம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கன்னியாகுமரி கடலில் கடும் சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றம் ஏற்பட்டு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்தன. இதில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுதுறையில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கிழக்கு பக்கம் உள்ள படகு தளத்தின் ஒரு பகுதி உடைந்து சேதம் அடைந்தது. அத்துடன் உடைந்த பகுதி விழுந்தது. இதனால் அந்த படகுதளத்தில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 3 படகுகளையும் நிறுத்தி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Next Story