தொழிலாளியை தாக்கியவர் கைது


தொழிலாளியை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 30 May 2020 12:41 AM GMT (Updated: 30 May 2020 12:41 AM GMT)

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்த ரஜினி (வயது 56). தொழிலாளி சேலம் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (31).

தர்மபுரி,

பழைய காகிதம், இரும்பு பொருட்களை சேகரித்து விற்கும் பணியில் இவர்கள் 2 பேரும் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் தர்மபுரியில் சந்தித்த இவர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது ரஜினியை, மணிகண்டன் கல்லால் தாக்கியதாக தெரிகிறது.

இதில் காயமடைந்த ரஜினி சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story