நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு ; ஆராய்ச்சி நிலையம் தகவல்


நாமக்கல்  மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு ; ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2020 3:52 AM GMT (Updated: 11 Jun 2020 3:52 AM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 2 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) 2 மி.மீட்டர் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்று மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. முட்டை மற்றும் கோழிகளை பண்ணை வாயில் அல்லது கடைகளில் விற்பனை செய்யும் போது பாதுகாப்பாக முக கவசம் மற்றும் கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.

பண்ணைகள் மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்ப கூடாது. கடைகளில் முட்டை மற்றும் கோழி விற்பனையின்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Related Tags :
Next Story