காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 தொழில் முனைவோருக்கு நிதி உதவி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 20 தொழில் முனைவோருக்கு நிதி உதவி
x
தினத்தந்தி 26 Jun 2020 11:17 PM GMT (Updated: 26 Jun 2020 11:17 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 20 தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

காஞ்சீபுரம், -

கொரோனா தொற்றால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ள தொழில் முனைவோர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களின் தொழில்கள் மற்றும் வாழ்வாதாரம் புத்துயிர் பெறும் நோக்கில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 20 தனிநபர் தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பொன்னையா நிதி உதவியை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் தினகர் ராஜ்குமார், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story