ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரேநாளில் 108 பேருக்கு கொரோனா


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரேநாளில் 108 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jun 2020 4:36 AM GMT (Updated: 27 Jun 2020 4:36 AM GMT)

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தபால் ஊழியர் மற்றும் 2 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 555 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ராமநாதபுரம் வள்ளல்பாரி வடக்குத்தெருவில் 39 வயது நபர், மதுரை நரிமேடு அவ்வையார்தெருவில் 78 வயது நபர், விருதுநகர் கட்டனூரை சேர்ந்த 30 வயது நபர், சிவகங்கை சாஸ்திரி தெருவை சேர்ந்த 38 வயது நபர், ராமநாதபுரம் வடக்குத்தெருவில் 21 வயது பெண், கூரியூர் உமர்நகர் 32 வயது நபர், ராமநாதபுரம் ஆயுதப்படை குடியிருப்பு காவலரின் 24 வயது மகள், எஸ்.பி.பட்டினம் மேலத்தெருவில் 33 வயது பெண், ராமநாதபுரம் அண்ணாநகரில் 20 வயது பெண், காக்கூரில் 21 வயது பெண், சூரங்கோட்டை மேலத்தெருவில் 31 வயது பெண், ராமநாதபுரம் தங்கப்பாநகரில் 33 வயது பெண், கீழக்கரை வடக்குத்தெருவில் 25 வயது பெண், பரமக்குடி தர்மராஜபுரத்தில் 45 வயது நபர், கருணாநிதிபுரம் பகுதியில் 21 வயது பெண், செங்குந்தர் தெருவில் 48 வயது நபர், முகமது அலி தெருவில் 41 வயது நபர், பாரதிநகரில் 60 வயது நபர், காமராஜர் நகரில் 27 வயது நபர், அவரின் மனைவி, அண்ணாநகரில் 25 வயது நபர், திருவள்ளுவர் நகரில் 22 வயது நபர், வசந்தபுரத்தில் 25 வயது பெண், கீழப்பெருங்கரை மேலத்தெருவில் 60 வயது பெண், 35 வயது நபர், அவரின் மனைவி, மகன், மகள், அருளானந்தபுரத்தில் 27 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர ராமநாதபுரம் அண்ணாநகரில் 35 வயது நபர், டி.கருங்குளம் பகுதியில் 56 வயது பெண், முதுகுளத்தூரில் 48 வயது நபர், காக்கூரில் 48 வயது நபர், கமுதி முஸ்லிம் தெருவில் 23 வயது நபர், சடையனேந்தல் பாப்பாங்குளத்தில் 38 வயது நபர், கோவிலாங்குளம் வடக்குத்தெருவில் 52 வயது நபர், அவரின் மகள், பேரையூர் நாடார் தெருவில் 26 வயது பெண், செவல்பட்டியில் 37 வயது நபர், திருப்புல்லாணி சாயக்காரத்தெருவில் 74 வயது நபர், அவருடைய மனைவி, 45 வயது, 39 வயது மகன்கள், 2 பேரன்கள், ஒரு பேத்தி ஆகியோருக்கும், கீழக்கரை வடக்குத்தெருவில் 45 வயது பெண், அவரது மகள், கீழக்கரை மறவர்தெருவில் 42 வயது பெண், கீழக்கரை எஸ்.என்.தெருவில் 26 வயது பெண், கீழக்கரை வடக்குத்தெருவில் 26 வயது பெண், கீழக்கரை மறவர்தெருவில் 50 வயது நபர், அதேபகுதியில் 44 வயது பெண், அவரது 19 வயது மகள், 17 வயது மகன், அதேபகுதியில் 20 வயது நபர், 68 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொற்று உறுதி

கீழக்கரை நடுத்தெருவில் 28 வயது பெண், கீழக்கரை பிரபுக்கள் தெருவில் 21 வயது பெண், மறவர்தெருவில் 51 வயது பெண், 52 வயது பெண், 35 வயது பெண், அவரின் மகள் மற்றும் 33 வயது பெண், அவரின் 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோருக்கும், கீழக்கரை கிழக்கு நாடார்தெருவில் 70 வயது நபர், அவரின் மகன், தம்பி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சூடியூரில் 28 வயது நபர், கீழக்கரை தட்டர்தெருவில் 25 வயது பெண், அவரின் 2 வயது மகள், கீழக்கரை அரசு ஆஸ்பத்திரி பகுதியில் 34 வயது பெண், வாணியர்தெருவில் 58 வயது பெண், பாண்டுகுடி வெள்ளையபுரம் 29 வயது நபர், 38 வயது நபர், ஊருணிகோட்டை கடம்பூரை சேர்ந்த 65 வயது நபர், தொண்டி வட்டக்கேணி தெருவில் 27 வயது நபர், அணீஸ்நகரில் 27 வயது பெண், பாண்டுகுடியில் 29 வயது நபர், டி.கிளியூரில் 30 வயது நபர், பாண்டுகுடி நடுத்தெருவில் 39 வயது நபர், பாண்டுகுடி கிழவாண்டி பகுதியில் 43 வயது பெண், 49 வயது பெண், வடக்குத்தெருவில் 52 வயது நபர், இடையன்வயலில் 18 வயது நபர், நெடுமரம் நடுத்தெருவில் 26 வயது பெண், அவரின் 3 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொண்டி ஊருணி கோட்டையில் 38 வயது நபர், ஓரிக்கோட்டையில் 40 வயது பெண், தினைகாத்தான்வயலில் 58 வயது பெண், திருவாடானை கீழக்கோட்டையில் 38 வயது நபர், சுப்பிரமணியபுரத்தில் 58 வயது பெண், அவரின் 37 வயது மகன், தினைகாத்தான்வயல் 39 வயது நபர், அவரின் தம்பி, அதேபகுதியை சேர்ந்த 32 மற்றும் 28 வயது பெண்கள், 30 வயது நபர், ஓரியூரை சேர்ந்த 30 வயது நபர், எஸ்.பி.பட்டினம் உப்புக்காரத்தெருவில் 23 வயது பெண், வெள்ளையாபுரத்தில் 23 வயது பெண், எஸ்.பி.பட்டிணம் மேற்குத்தெருவில் 52 வயது நபர், 50 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

663- ஆக உயர்வு

இதேபோல எமனேசுவரம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் 38 வயது நபர் மற்றும் 35 வயது நபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாண்டியூர், பொட்டகவயல் பகுதிகளில் பணியாற்றி வரும் இவர்கள் பார்த்திபனூர் சோதனை சாவடியில் பணியில் இருந்தபோது தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் பரமக்குடி எமனேசுவரம் கமலாநேரு தெருவை சேர்ந்த 35 வயது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தபால் அலுவலகம் மூடப்பட்டது. ஒரே நாளில் 108 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்றும் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது. கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

குணமடைந்தவருக்கு மீண்டும் அறிகுறி

ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 41 வயது நபர் கடந்த 3-ந்தேதி நோய் தொற்று ஏற்பட்டு 4-ந்தேதி முதல் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து கடந்த 15-ந்தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா சிகிச்சை முடிந்து உடல்நலம் பெற்ற நபருக்கு மீண்டும் கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ள சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story