பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2020 12:19 AM GMT (Updated: 1 July 2020 12:19 AM GMT)

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுரண்டை,

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தென்காசி மாவட்டம் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் செங்கோட்டையிலும் நேற்று 2-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story