கள்ளக்குறிச்சியில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கள்ளக்குறிச்சியில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 July 2020 4:41 AM GMT (Updated: 15 July 2020 4:41 AM GMT)

கள்ளக்குறிச்சியில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,847 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,075 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுதவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இந்த நிலையில் 230 பேரின் பரிசோதனை முடிவு நேற்று மாலை வெளியானது. அதில் 57 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,847-ல் இருந்து 1904 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் சென்னை, கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், மற்றவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

Next Story