கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 July 2020 6:01 AM GMT (Updated: 16 July 2020 6:01 AM GMT)

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர்,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் அரிகிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கொரோனா பணியில் ஈடுபட்டு இறந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், வருவாய்துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மகேஷ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சண்முகசிகாமணி, வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story