சிவகாசிக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு


சிவகாசிக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 17 July 2020 8:20 AM GMT (Updated: 17 July 2020 8:20 AM GMT)

சிவகாசிக்கு வந்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிவகாசி,

பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை நியமித்தது. இதை தொடர்ந்து அவர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தநிலையில் அவர் சென்னையில் இருந்து அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று சிவகாசிக்கு வந்தார். அப்போது அவருக்கு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் பூர்ணகும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதில் விருதுநகர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், சிவகாசி தெற்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.பலராமன், வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் முத்துப்பாண்டியன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மகளிர் அணி செயலாளர் சுடர்வள்ளி சசிக்குமார், திருத்தங்கல் நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமணா, எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணை செயலாளர் செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் சேதுராமன், துணை செயலாளர்கள் சீனிவாசன்,ரவிச்செல்வம், திருத்தங்கல் நகர இலக்கிய அணி செயலாளர் தங்கராஜ், ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும், சிவகாசி தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளருமான லயன் லட்சுமிநாராயணன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் செல்லப்பாண்டியன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக சிவகாசி சிவன் கோவில் சுப்பிரமணியபட்டர், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு கோவில் பிரசாதம் வழங்கினார்.

ராஜபாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவரும் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளருமான வனராஜ், துணைத்தலைவரும் மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளரும் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணராஜ், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகேசன், பூபதிராஜா கூட்டுறவு வங்கித்தலைவர் ராதாகிருஷ்ணன் ராஜா, முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகையா பாண்டியன், சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ், நடிகர் சேத்தூர் விஜயகுமார், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும் சேத்தூர் கூட்டுறவு சங்கத் தலைவருமான பட்டுராஜன், செட்டியார்பட்டி நகர செயலாளரும் மாவட்ட ஆவின் இயக்குனருமான அங்குதுரை வரவேற்றனர்.

மேலும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை மாவட்ட எல்லையில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக கனி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் இளங்கோவன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் முனீஸ்வரன், சாத்தூர் ஒன்றிய அவைத்தலைவர் மாணிக்கம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பூபாலன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பிரதிநிதி கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை நடராஜன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

இதைதொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, மயில்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மீரா தனலட்சுமி முருகன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக சிட்டிபாபு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயமணி முருகன், நூர்சாகிபுரம் கிளை செயலாளர் மாரியம்மாள் ராமசாமி, பெருமாள் பிச்சை, மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ் ஆகியோர் அமைச்சரை வரவேற்றனர்.

வெம்பக்கோட்டை யூனியன் முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் நல்லதம்பி, ஒன்றிய கவுன்சிலர்கள் கல்லமநாயக்கர்பட்டி அழகர்சாமி, ஏ.லட்சுமியாபுரம் குட்டி, ஆலங்குளம் ஈஸ்வரி, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், கவுன்சிலர்கள் மகாலட்சுமி முத்துகிருஷ்ணன், கோவிந்தலட்சுமி, மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ராஜாசிங், வெம்பக்கோட்டை 48 பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவரும், விஜயகரிசல்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிச்சியார்பட்டி மாரியப்பன் சந்தன மாலை அணிவித்து வரவேற்றார்.

காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகரில் வரவேற்பு அளித்தனர். அப்போது அமைச்சருக்கு சால்வை, மாலைகள் அணிவித்தும், மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சித்தனேந்தல் தேவர், ஜெயலலிதா பேரவை பொருளாளர் மச்சேஸ்வரன், இணைச்செயலாளர் ரமாதேவி குருசாமி, முன்னாள் யூனியன் தலைவர்கள் ஆவரங்குளம் ஜெயராஜா, ஆனந்தவள்ளி பிரபாத், நரிக்குடி முன்னாள் ஒன்றிய இளைஞரணி செயலாளரும் திரைப்பட நடிகருமான கே.சி.பிரபாத், நரிக்குடி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணை செயலாளர் மறையூர் வீரேசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட இணை செயலாளரும் ஆவியூர் ஊராட்சி மன்ற தலைவருமான ரவி, காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் மறைக்குளம் ராஜேந்திரன், நரிக்குடி முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்பலம், செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கைமார்பன், தோப்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்புராஜா, முன்னாள் கவுன்சிலர் தோணுகால் வெயில்கண்ணன், காரியாபட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் குண்டு குமார், ஒன்றிய மீனவரணி செயலாளர் வரதராஜன், மந்திரி ஓடை முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் டி.வேப்பங்குளம் ஆதி ஈஸ்வரன், கிழவனேரி கார்த்திக், நரிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் முத்துமாரி காளஸ்வரன், நரிக்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் மணிகண்டன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சரவணன், பட்டமங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன், பனைக்குடி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story