மணல்மேடு அருகே பரிதாபம்: விஷவண்டுகள் கடித்து தந்தை-மகள் சாவு


மணல்மேடு அருகே பரிதாபம்: விஷவண்டுகள் கடித்து தந்தை-மகள் சாவு
x
தினத்தந்தி 23 July 2020 3:30 AM IST (Updated: 23 July 2020 7:08 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே விஷவண்டுகள் கடித்து தந்தை-மகள் பரிதாபமாக இறந்தனர்.

மணல்மேடு,

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே கடலங்குடி தோப்பு செட்டித்தெருவை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவரது வீட்டின் எதிரே உள்ள ஒரு பனைமரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தன. சம்பவத்தன்று அந்த வழியாக சென்ற 4 பேரை விஷ வண்டுகள் கடித்தன.

இதில் படுகாயம் அடைந்த கடலங்குடி நாயுடு தெருவை சேர்ந்த ஆனந்தகுமார்(வயது 42), அவரது மகள் இன்ஷிகா(3) உள்பட 4 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தகுமார் மற்றும் அவரது மகள் இன்ஷிகா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருன்றனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்த ஆனந்தகுமார் மற்றும் அவரது குழந்தை இன்ஷிகா ஆகியோர் விஷ வண்டுகள் கடித்து இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
1 More update

Next Story