சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2020 11:58 PM GMT (Updated: 29 July 2020 11:58 PM GMT)

சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். வட்டச்செயலாளர் முருகையா, ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் பாலுச்சாமி, மாவட்ட செயலாளர் வேல்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கொரோனா தொற்று தடுப்பு உபகரணங்களை சாலைப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டும், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மாவட்ட நெடுஞ்சாலைகள் பராமரிப்பு பணியை தனியாருக்கு ஒப்படைக்க போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு அரசு உத்தரவின்படி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. வட்ட துணை தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.

Next Story