முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


முத்தையாபுரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 July 2020 12:21 AM GMT (Updated: 30 July 2020 12:21 AM GMT)

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ஒத்தரசன், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் அந்தோணிசாமி வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி 53-வது வார்டு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தரமான சாலை வசதி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 52-வது வார்டுக்கு உட்பட்ட கிருஷ்ணாநகர் 3-வது தெருவில் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சந்தியாகு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அருள்தாஸ், முத்துகிருஷ்ணன், முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி வேலம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story