திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 31 July 2020 5:40 AM GMT (Updated: 31 July 2020 5:40 AM GMT)

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 29 எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை செய்யும் பணிகள் நிறைவு நிலையை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் 2,899 லாட்டுகளில் (மூட்டை) பருத்தி பஞ்சுகளை ஏலத்துக்கு விவசாயிகள் வைத்திருந்தனர்.

ரூ.2 கோடிக்கு விற்பனை

இந்த ஏலத்தில் இந்திய பருத்தி கழகம் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி ஏலப்பெட்டியில் போட்டனர்். இதனை தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் வித்யா, கண்காணிப்பாளர்் செந்தில் முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்். இதில அதிகபட்சமாக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 550-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 9-க்கும் விலை கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 750-க்கு விற்பனையானது. இதில் 4,190 குவிண்டால் பருத்தி ரூ.2 கோடிக்கு விற்பனையானது.

Next Story