புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு


புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
x

புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை ஜீவா நகர் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 75). இவர் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ஆரோக்கியமேரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story