காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு


காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 7 Aug 2020 1:09 AM GMT (Updated: 7 Aug 2020 1:09 AM GMT)

காஞ்சீபுரம் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழி ரோட்டுத்தெருவைச் சேர்ந்தவர் சோமு. இவர், மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சுதன் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவருடைய மகன் ஜெகத்பிரியன் (9). 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

குளத்தில் மூழ்கி பலி

நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று திருப்புட்குழி அருகே உள்ள தாமரைக்குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜெகத்பிரியன், சுதன் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பாலுச்செட்டிசத்திரம் போலீசார், குளத்தில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story