செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 294 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 294 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2020 12:50 AM GMT (Updated: 27 Aug 2020 12:50 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 294 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பகுதியில் 12 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட வண்டலூர், மண்ணிவாக்கம், ஊரப்பாக்கம், பெருமாட்டுநல்லூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் 32 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 6 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 428 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 500 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 386 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 542 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 23, 25 வயதுடைய ஆண்கள், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 32, 45, 28, வயதுடைய பெண்கள், 32, 21, 36 வயதுடைய ஆண்கள், 66, வயதுடைய முதியவர், 74 வயதுடைய மூதாட்டி, மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 48 வயது ஆண், 9 வயது சிறுமி, 25 வயதுடைய பெண், ஒரகடம் பகுதியை 23 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 329 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 295 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 813 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 257 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 280 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 23 ஆயிரத்து 331 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 172 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

1,776 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 2 பேர் பலியானதால் மாவட்டம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 383 ஆனது.

Next Story