நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2020 1:33 AM GMT (Updated: 16 Sep 2020 1:33 AM GMT)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர்,

நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவர் சங்க மாநில துணை செயலாளர்் பிரகாஷ், மாவட்ட தலைவர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

2 கோடி பேருக்கு வேலை

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும். சட்டமன்ற முற்றுகை போராட்டத்தில் அடக்குமுறையை கையாண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் படித்த இளைஞர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டு வருவதால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை மத்திய அரசு உறுதிபடுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Next Story