சேலத்தில் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது 5 பேர் பலி


சேலத்தில் ஒரே நாளில் 286 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது 5 பேர் பலி
x
தினத்தந்தி 20 Sep 2020 3:40 AM GMT (Updated: 20 Sep 2020 3:40 AM GMT)

சேலத்தில் நேற்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது. மேலும் 5 பேர் பலியானார்கள்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றுமுன்தினம் கொரோனாவுக்கு 288 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 286 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 174 பேர், வீரபாண்டியில் 16 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 14 பேர், பனமரத்துப்பட்டியில் 11 பேர், ஓமலூரில் 8 பேர் பாதிக்கப்பட்டனர்.

நங்கவள்ளி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 பேர், எடப்பாடி, சேலம் ஒன்றியம், மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், சங்ககிரியில் 4 பேர், தாரமங்கலம், ஏற்காடு ஆகிய பகுதியில் தலா 3 பேர், காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, வாழப்பாடி ஆகிய பகுதியில் தலா 2 பேர், இளம்பிள்ளை, மேச்சேரி, நரசிங்கபுரம், தலைவாசல் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கும், நாமக்கல் இருந்து சேலம் வந்த 6 பேர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது.

5 பேர் பலி

சேலம் டவுன் பகுதியை சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். மேலும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல்லை சேர்ந்த 42 வயது நபர், சேலத்தை சேர்ந்த 54 வயது நபர், 47 வயது ஒருவர், 78 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 259 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story