தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்


தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 20 Sep 2020 10:30 PM GMT (Updated: 20 Sep 2020 7:54 PM GMT)

தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

தென்காசி,

தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கர்நகர் பங்கு தந்தை ஜோசப் ராஜ், அகரக்கட்டு பங்குதந்தை எட்வின் ராஜ், அலவந்தான்குளம் பங்குத்தந்தை அந்தோணி வியாகப்பன் ஆகியோர் கொடியேற்றினர். நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா வருகிற 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி மாலையில் நற்கருணை பவனி, 28-ந் தேதி சப்பர பவனி நடைபெறுகிறது. இவை இரண்டும் ஆலய வளாகத்திலேயே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

29-ந் தேதி நடைபெறும் விழாவில் பாளை. மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொள்கிறார். விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தையர்கள் போஸ்கோ குணசீலன், சதீஷ் செல்வ தயாளன் மற்றும் பங்கு பேரவையினர் செய்துள்ளனர்.

Next Story