தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:33 AM GMT (Updated: 30 Sep 2020 12:33 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் பழைய தாலுகா அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள் தலைமை தாங்கினார். ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜகோபால், தி.மு.க. ஒன்றிய செயலாளர் கொம்பையா, நகர செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் நம்பிராஜன், வட்டார காங்கிரஸ் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தர்ராஜன், பெருங்குளம் நகர செயலாளர் சுடலை, மருத்துவர் அணி சிவகுமார், விடுதலை சிறுத்தைகள் ராஜ், தொழில்நுட்ப அணி பத்திரகாளிமுத்து, பட்டாணிசேகர், காங்கிரஸ் சார்பில் நகர செயலாளர் சித்திரை, ஐ.என்.டி.யு.சி. சந்திரன், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் சிவகளைபிச்சையா, ம.தி.மு.க. நகர செயலாளர் வள்ளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளாத்திகுளம்-சாத்தான்குளம்

விளாத்திகுளம் பழைய தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரிலும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் பலவேச பாண்டியன், வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜனார்த்தனம், ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுந்தரகணபதி, நகர மனித நேய மக்கள் கட்சி செயலாளர் உசேன், ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் இந்திரகாசி, பசுபதி, நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வக்கீல் வேனுகோபால், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மாவட்ட ம.தி.மு.க. கலைபிரிவு செயலாளர் மகராஜன், மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி விவசாய பிரிவு அமைப்பாளர் சுகுமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஒன்றிய மனித நேய மக்கள் கட்சி செயலாளர் தவுபிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய பொருளாளர் சுந்தர், நகர ம.தி.மு.க. செயலாளர் ஜெயராஜ், நகர இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் ராஜகோபால், ஒன்றிய தி.மு.க. பொருளாளர் வேல்துரை, ஒன்றிய ம.தி.மு.க. மாணவரணி செயலாளர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Next Story