அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 32 பேர் பாதிப்பு பெரம்பலூரில் 8 பேருக்கு தொற்று


அரியலூரில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மேலும் 32 பேர் பாதிப்பு பெரம்பலூரில் 8 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 7 Oct 2020 3:35 PM GMT (Updated: 7 Oct 2020 3:35 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 32 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பெரம்பலூரில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 6 பேருக்கும், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருவருக்கும், ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10 பேருக்கும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேருக்கும் உள்பட மொத்தம் 32 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,955 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சையில் குணமடைந்து 3,109 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 77 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது. நேற்று மொத்தம் 936 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 57 ஆயிரத்து 921 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ஆயிரத்து 919 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குணம் அடைந்த ஆயிரத்து 808 பேர் சிகிச்சைக்கு பிறகு வெவ்வேறு தினங்களில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 90 பேர் பல்வேறு ஊர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 927 ஆக உயர்ந்துள்ளது.


Next Story