அரியலூர்- பெரம்பலூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று


அரியலூர்- பெரம்பலூரில் 23 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 Oct 2020 11:30 AM GMT (Updated: 18 Oct 2020 11:17 AM GMT)

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 23 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரம்பலூர்,

அரியலூர், தா.பழூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தலா 3 பேருக்கும், திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் தலா 2 பேருக்கும், செந்துறை, ஜெயங்கொண்டம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும், அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் தலா ஒருவருக்கும் என மொத்தம் 15 பேர் புதிதாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,243 ஆக உயர்ந்துள்ளது. 

ஏற்கனவே கொரோனாவிற்கு மாவட்டத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு தற்போது 764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 3,433 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 627 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

பெரம்பலூர் வட்டாரத்தில் நேற்று 3 பேரும், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டாரங்களில் தலா 2 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் ஒருவரும் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,040 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்டத்தில் ஏற்கனவே 20 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் இருந்து இதுவரைக்கும் 1,940 பேர் டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில், தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 363 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Next Story